Thursday, October 17, 2024

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (TTSE) வினா விடை - 20

1. பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

அ) காக்கென்று – தொகுத்தல் விகாரம்
ஆ) காணீர் - இடைச்சொல்
இ) காய்மணி - வினைத்தொகை
ஈ) மெய்முறை - வேற்றுமைத்தொகை

2. வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை
ஆ) தற்குறிப்பேற்றம்
இ) உருவகம்
ஈ) தீவகம்

3. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

அ) தன்மையணி
ஆ) தீவக அணி
இ) நிரல்நிறை அணி
ஈ) தற்குறிப்பேற்றயணி

4. தீவகம் என்னும் சொல்லின் பொருள்

அ) விளக்கு
ஆ) நெருப்பு
இ) காற்று
ஈ) வெம்மை

5. ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு பொருந்தி பொருள் தருவது

அ) தன்மையணி
ஆ) தீவக அணி
இ) நிரல்நிறை அணி
ஈ) தற்குறிப்பேற்றயணி

6. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மை அமையப் பாடுவது

அ) தன்மையணி
ஆ) தீவக அணி
இ) நிரல்நிறை அணி
ஈ) தற்குறிப்பேற்றயணி

7. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன்.

அ) கிருத்து
ஆ) சூசையப்பர்
இ) நபிகள்நாயகம்
ஈ) சிவன்

8. தேம்பாவணிநூலின்காண்டம், படலம், காதை முறையே.

அ) 4, 36, 3615
ஆ) 3, 30, 3615
இ) 3, 36, 3615
ஈ) 3, 36, 3516

9 தேம்பாவணிபடைக்கப்பெற்றஆண்டு ------- ஆம்நூற்றாண்டு.

அ) 15
ஆ) 16
இ) 17
ஈ) 18

10. கரிசல் எழுத்தாளர் வரிசையில் மூத்தவர்.

அ) ஜெயகாந்தன்
ஆ) கு. அழகிரிசாமி
இ) சோ. தர்மன்
ஈ) பூமணி

No comments:

Post a Comment