Monday, December 2, 2024

அளவுக்கு மிஞ்சினால்...

⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்

⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்.

⭕️ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி

⭕️ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்.

⭕️பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.

⭕️ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.

⭕️ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.

⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்

⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

⭕️ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்

⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்.

⭕️ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

⭕️ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

Post Comments

No comments:

Post a Comment

Back To Top