கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (டிச.2) கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் கடலோர மற்றும் சில உள் மாவட்டங்களை பெஞ்சல் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. தொடர்ந்து பெய்த கனமழையால் மக்ககள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நீர் நிலைகள் நிரம்பி, ஊருக்குள் புகுந்ததால் பல மாவட்டங்களில் குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில்
நாளையும் (டிச.2) மழையும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் விடுமுறை விடப்பட்டு உள்ள மாவட்டங்கள் பற்றிய விவரம் வருமாறு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: விழுப்புரம்திருவண்ணாமலைகடலூர் பள்ளிகள் மட்டும் விடுமுறை: வேலூர்ராணிப்பேட்டை
No comments:
Post a Comment