1.
‘நிலவுப்பூ’ என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்.
அ) சிற்பிபாலசுப்பிரமணியன்
ஆ) தி.சு. நடராசன்
இ) ரா. அ. பத்மநாபன்
ஈ) அய்யப்ப மாதவன்
2. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் சாகித்திய அகாதெமி விருது பெற்றநூல்.
அ) ஒளிப்பறவை
ஆ) சூரியநிழல்
இ) ஒருகிராமத்துநதி
ஈ) பூஜ்யங்களின்சங்கிலி
3. பின்வருவனவற்றில் எது சிற்பி
பாலசுப்பிரமணியன் உரைநடை நூல் அல்ல.
அ) இலக்கியச்சிந்தனைகள்
ஆ) மலையாளக்கவிதை
இ) அலையும்சுவடும்
ஈ) சூரியநிழல்
4. மலையாளத்திலிருந்து கவிதைகளையும்
புதினங்களையும் தமிழில் மொழி பெயர்த்தவர்.
அ) சிற்பிபாலசுப்பிரமணியன்
ஆ) உத்தமசோழன்
இ) அய்யப்பமாதவன்
ஈ) வண்ணநிலவவன்
5. பின்வருவனவற்றில் எது சிற்பிபாலசுப்பிரமணியன்
கவிதை நூல் அல்ல.
அ) ஒளிப்பறவை
ஆ) ஒருகிராமத்துநதி
இ) மலையாளக்கவிதை
ஈ) பூஜ்யங்களின்சங்கிலி
6. அகத்திணை, புறத்திணை செய்திகளைப் பாடுபொருள்களாகக் கொண்ட இலக்கியம்.
அ) சங்கஇலக்கியங்கள்
ஆ) காப்பியங்கள்
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) இக்காலஇலக்கியங்கள்
7. காளைகளின் பல இனங்கள் இருப்பதைக் கூறும் கலித்தொகைப் பகுதி.
அ) குறிஞ்சிக்கலி
ஆ) முல்லைக்கலி
இ) மருதக்கலி
ஈ) நெய்தற்கலி
8. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணநூல்.
அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ) முத்துவீரியம்
ஈ) இலக்கணவிளக்கம்
9. …………. என்பது செறிவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு.
அதுவாக்கிய அமைப்பில், ஒருசொல் போலவே நடைபெறும்.
அ) தொகைமொழி
ஆ) விரிமொழி
இ) இயல்புமொழி
ஈ) விகாரமொழி
10. ‘எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை’ என்ற தொடர் அமைப்பிலிருந்து பிறழ்ந்து வரும் தொடர்.
அ) மாறுபட்டத்தொடர்
ஆ) மறுதலைத்தொடர்
இ) வேறுபட்டத்தொடர்
ஈ) ஒன்றிணைந்ததொடர்
11. ‘தொடரியல் பிறழ்வுநிலை’
பெரிதும் காணப்படும் இடம்……..
அ) பாடலின்முதல்
ஆ) பாடலின்நடு
இ) பாடலின்இறுதி
ஈ) பாடலடி
12. தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்கான முதன்மை ஆதாரம்.
அ) வாய்மொழிஇலக்கியம்
ஆ) சங்கஇலக்கியம்
இ) நீதிஇலக்கியம்
ஈ) காப்பியம்
13. ‘தமிழ் அழகியல்’ என்னும் நூலின் ஆசிரியர்.
அ) தி.க. நாகராஜன்
ஆ) இ. சுந்தரமூர்த்தி
இ) தி.சு.
நடராசன்
ஈ) மு. கிருஷ்ணமூர்த்தி
14. தி.சு.
நடராசனின் அல்லாத நூல் எது?
அ) கவிதையெனும்மொழி
ஆ) திறனாய்வுக்கலை
இ) ஒளிப்பறவை
ஈ) தமிழ்அழகியல்
15. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு
அறிமுகப்படுத்தியவர்களிள் குறிப்பிடத் தக்கவர்.
அ) ரா. அ. பத்மநாபன்
ஆ) அய்யப்ப மாதவன்
இ) தி.சு.
நடராசன்
ஈ) அன்னிதாமசு
16. இருவேறு பொருள்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி,
பின் வேறுபடுத்திக்காட்டுவது.
ஆ) வேற்றுப்பொருள்வைப்பணி
ஆ) பிரிதுமொழிதலணி
இ) பொருள்வேற்றுமைஅணி
ஈ) பொருளணி
17. தண்டியலங்காரத்தின் மூல நூல் எது?
அ) காவியதர்சம்
ஆ) குவலயானந்தம்
இ) மாறனலங்காரம்
ஈ) வீரசோழியம்
18. தண்டியலங்காரம் இயற்றப்பட்டக் காலம் ………
நூற்றாண்டு.
அ) எட்டாம்
ஆ) ஒன்பதாம்
இ) பத்தாம்
ஈ) பன்னிரண்டாம்
19. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) முத்துவீரியம்
ஈ) குவலயானந்தம்
(முத்துவீரியம் தவிர்த்து ஏனையவை அணியிலக்கணம் மட்டும் கூறும் இலக்கண நூல்களாகும்.)
20. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) மாறனலங்காரம்
ஆ) இலக்கணவிளக்கம்
இ) தொன்னூல்விளக்கம்
ஈ) வீரசோழியம்
(மாறனலங்காரம் தவிர்த்து ஏனையவை பிற இலக்கணத்தோடு அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்களாகும்.)
21. எட்டையபுரம் மன்னர்களின் வரலாற்றைக் கூறும் நூல்.
அ) பிரபந்த தீபிகை
ஆ) தரும தீபிகை
இ) வம்சமணிதீபிகை
ஈ) சிரார்த்த தீபிகை
22. பரலிசு. நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாக இயற்றியுள்ளார்.
அ) ம. பொ. சி
ஆ) திரு.வி. க
இ) வ.உ.
சி
ஈ) பி. சா. சு
23. ‘பாரதிகடிதங்கள்’ என்னும் நூலைப் பதிப்பித்தவர்.
அ) தி.சு. நடராசன்
ஆ) ந .முத்துசாமி
இ) பரலி சு. நெல்லையப்பர்
ஈ) ரா. அ. பத்மநாபன்
24. எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம்.
அ) பேசுவதைப்போலவேஎழுதுதல்
ஆ) எழுதுவதுபோலவேபேசுதல்
இ) வட்டாரவழக்கில்பேசுதல்
ஈ) பிறமொழிகலந்துபேசுதல்
25. தனிக்குறிலை அடுத்து வராத ஒற்றுகள் எவை?
அ) ல், ர்
ஆ) ய், ர்
இ) ய்,
ழ்
ஈ) ர், ழ்
No comments:
Post a Comment